ADDED : ஜூலை 13, 2011 08:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தலைநகர் டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், டில்லியின் அனைத்து பகுதிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும், போலீஸ் அதிகாரிகள் நகரின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

