sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா மீது... பலாத்கார வழக்கு!:பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் போலீசார் அதிரடி

/

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா மீது... பலாத்கார வழக்கு!:பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் போலீசார் அதிரடி

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா மீது... பலாத்கார வழக்கு!:பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் போலீசார் அதிரடி

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா மீது... பலாத்கார வழக்கு!:பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் போலீசார் அதிரடி


ADDED : மே 04, 2024 01:05 AM

Google News

ADDED : மே 04, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய, எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது, ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ், பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரில், சி.ஐ.டி., பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஹாசன் பண்ணை வீடுகளில், அவர்கள் நேற்று சோதனை நடத்தியதாலும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாசன் லோக்சபா தொகுதி ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவரது தந்தை ரேவண்ணா, 66, ஹொளேநரசிபுரா தொகுதியின் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், பிரஜ்வலும், அவரது தந்தை ரேவண்ணாவும், தன்னை பலாத்காரம் செய்ததாக, அவர்களது வீட்டு வேலைகார பெண் புகார் அளித்தார். அதனடிப்படையில், தந்தை - மகன் மீது ஹொளேநரசிபுரா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடன், வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவான, எஸ்.ஐ.டி.,யின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, பிரஜ்வாலால் தான் பாதிக்கப்பட்டதாக கூறி, நேற்று முன்தினம் மேலும் ஒரு பெண், ஹாசன் மாவட்ட மாஜிஸ்திரேட் முன் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இது, இரண்டாவது புகாராக பதிவானது. அதுமட்டுமின்றி, பிரஜ்வல் மீது ஹாசனை சேர்ந்த, ம.ஜ.த., பெண் பிரமுகர் ஒருவரும், சிறப்பு புலனாய்வு குழு ஏ.டி.ஜி.பி., பிரிஜேஷ்குமார் சிங்கிற்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அனுப்பி உள்ளார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக முன்னர் பதவி வகித்தேன். 2021ல் எனக்கு தெரிந்த கல்லுாரி மாணவியர் சிலருக்கு, விடுதியில் அறை வாங்கிக் கொடுப்பது தொடர்பாக, ஹாசனில் உள்ள எம்.பி., அலுவலகத்தில் பிரஜ்வலை சந்தித்தேன். மாடியில் உள்ள அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். என்னை படுக்கையில் பிடித்து தள்ளி, பலாத்காரம் செய்ய முயன்றார்; நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

'உன் கணவரால் தான், என் அம்மா பவானிக்கு கிடைக்க வேண்டிய எம்.எல்.ஏ., சீட் பறிபோனது. எனக்கு ஒத்துழைக்கா விட்டால், உன்னையும், உன் கணவரையும் சுட்டுக் கொல்வேன்' என்று பிரஜ்வல் மிரட்டினார். பின், துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்தார். அதை வீடியோ மற்றும் புகைப்படமாகவும் எடுத்தார். நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால், வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டினார். அதன்பின், பல முறை என்னை பலாத்காரம் செய்தார். சிறப்பு புலனாய்வு குழு மீது நம்பிக்கை இருப்பதால் புகார் செய்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இந்தப் புகாரின்படி, பிரஜ்வல் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (2) (என்), ஒரே பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்வது; 354 (ஏ) (1) வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொள்வது; 354 (பி) ஆடைகளை அகற்றும் நோக்கில் பெண்ணை தாக்குவது; 66 (இ) தனியுரிமையை மீறுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* முன்ஜாமின் வாபஸ்

பிரஜ்வல், ரேவண்ணா மீது, முதலில் அவர்கள் எளிதில் ஜாமினில் வெளிவரும் பிரிவுகளில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் எழுந்ததால், தற்போது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது. இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில், விசாரணைக்கு ஆஜராகும்படி பிரஜ்வல், ரேவண்ணாவுக்கு, சிறப்பு புலனாய்வு குழு இரண்டு முறை சம்மன் அனுப்பியது. பிரஜ்வல் வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளார். ரேவண்ணா உள்ளூரில் இருந்தும், விசாரணைக்கு ஆஜராகவில்லை. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்த போது, சி.ஐ.டி., சார்பில் ஆஜரான வக்கீல் ஜெகதீஷ் வாதாடுகையில், ''மனுதாரர் மீது பலாத்கார வழக்கு பதிவாகவில்லை. ஜாமினில் வெளிவரக்கூடிய வகையில் தான், வழக்குப் பதிவாகி உள்ளது. இதனால், அவருக்கு முன்ஜாமின் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்று வாதிட்டார். இதை ரேவண்ணா தரப்பும் ஏற்றுக்கொண்டு, முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றது.

* பவானிக்கு சம்மன்

அதேநேரத்தில், ஹொளேநரசிப்புரா அருகே படுவலஹிப்பே, சென்னராயப்பட்டணா அருகே கன்னிகடாவில் உள்ள, ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, விசாரணை அதிகாரி சீமா லட்கர் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். மற்றொரு குழுவினர் ஹொளேநரசிப்புரா ஹரதனஹள்ளியில் உள்ள ரேவண்ணா வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, ரேவண்ணா மனைவியான பவானியின் அம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். சோதனை முடிந்ததும், விசாரணைக்கு ஆஜராக 3வது நோட்டீஸை, ரேவண்ணா வீட்டின் கதவில் ஒட்டிவிட்டு, விசாரணை குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

விசாரணைக்கு ஆஜராகும்படி, ரேவண்ணா மனைவி பவானிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபோல, பெங்களூரு பசவனகுடியில் உள்ள ரேவண்ணா வீட்டிலும், விசாரணை அதிகாரி சுமன் பன்னேகர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். ஹாசனில் சோதனை நடத்திய விசாரணை குழு அங்கேயே தங்கி உள்ளது.

ரேவண்ணா மீது பெண் கடத்தல் வழக்கு


மைசூரு கே.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 20 வயது வாலிபர் அளித்த புகார்:கடந்த 2018 முதல் 2021 வரை, ஹாசன் ஹொளேநரசிப்புராவில் உள்ள ரேவண்ணா வீட்டில் என் அம்மா வேலை செய்தார். 2021ல் வேலையில் இருந்து நின்று விட்டார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு, எங்கள் வீட்டிற்கு ரேவண்ணாவின் உறவினர் சதீஷ் பாபு வந்தார். என் அம்மாவிடம், 'போலீஸ் உன்னிடம் விசாரித்தால், நாங்கள் சிக்கிக் கொள்வோம்' என்றார்.
ரேவண்ணா அழைப்பதாக கூறி, மோட்டார் சைக்கிளில் என் அம்மாவை அழைத்துச் சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.கடந்த 1ம் தேதி என் நண்பர்கள் சிலர், என்னிடம் மொபைல் போனில் பேசினர். உன் அம்மாவின் கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வெளியாகி இருப்பதாக கூறினர். என் அம்மாவை பற்றி, இப்போது எந்த தகவலும் இல்லை. அவரை கடத்திச் சென்று, சிறை வைத்துள்ளனர். அவரை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ரேவண்ணா, சதீஷ் பாபு மீது கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. நேற்று காலை சதீஷ் பாபு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கேட்டு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ரேவண்ணா தரப்பில் அவசரமனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மாலை விசாரணை நடந்தது.வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி சந்தோஷ் பட் கூறுகையில், ''இந்த வழக்கும் பாலியல் தொடர்பான வழக்கு. முழு விவரங்களையும் பெற்ற பின்னர், முன் ஜாமின் மனு மீது, உத்தரவு பிறப்பிக்கிறேன்,'' என்றார்.இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.








      Dinamalar
      Follow us