UPDATED : செப் 07, 2011 09:39 PM
ADDED : செப் 07, 2011 08:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வங்கதேசத்திலிருந்து திரும்பும் பிரதமர் மன்மோகன் சிங், டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து ராம் மனோகர் லோகியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரதமருடன் உடன்சென்ற சுகாதரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், சிகிச்சை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார். மருத்துவமனையில் சுமார் அரைமணி நேரம் இருந்த பிரதமர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கூறினார்.

