ADDED : ஆக 07, 2024 09:04 PM

புதுடில்லி: தலைநகர் டில்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து டில்லி, உத்திரபிரதேசம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து கடந்த ஜூலை 31-ம் தேதியன்று தலைநகர் டில்லி , என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டலம் ஆகிய பகுதிகளில் மாலை முதல் கனமழை பெய்ய துவங்கி 2 மணி நேரம் கொட்டித்தீர்த்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆக.07) மாலை வடக்கு , மற்றும் கிழக்கு டில்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யத்துவங்கியுள்ளது. இதனால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.