திருமண அழைப்பிதழ் மூலம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
திருமண அழைப்பிதழ் மூலம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
ADDED : ஏப் 11, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்ச்சூர்: இளம் பெண், தன் திருமண அழைப்பிதழ் மூலம் ஓட்டுப்பதிவின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
ராய்ச்சூர் மான்வியின், அரோலி கிராமத்தை சேர்ந்தவர் பல்லவி, 21. இவருக்கு ஏப்ரல் 24ல், திருமணம் நிச்சயமாகி உள்ளது.
இதற்காக அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர். இதில் மணமகள் பல்லவி, ஓட்டு பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். பணம், பரிசு பொருள் வாங்காமல் ஓட்டு போட வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்.
திருமண அழைப்பிதழில், 'ஓட்டு போடுவது மகளை போன்றதாகும். மகளை பணத்துக்காக விற்காதீர்கள். விழிப்புடன் ஓட்டு போடுங்கள்' என குறிப்பிட்டுள்ளார். இது அனைவரையும் கவர்ந்து உள்ளது.
இந்த திருமண அழைப்பிதழை, தேர்தல் அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

