sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜாமின் கிடைக்குமா ?: சி.பி.ஐ., வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

/

ஜாமின் கிடைக்குமா ?: சி.பி.ஐ., வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

ஜாமின் கிடைக்குமா ?: சி.பி.ஐ., வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

ஜாமின் கிடைக்குமா ?: சி.பி.ஐ., வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

5


ADDED : செப் 13, 2024 02:34 AM

Google News

ADDED : செப் 13, 2024 02:34 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., கைதை எதிர்த்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை அமலாக்கத்துறை, சி.பி.ஐ,. விசாரித்து வருகிறது. இதில் நடந்த பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அவரது வீட்டில் வைத்தே கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதியன்று சி.பி.ஐ, வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது. இரு வழக்குகளும் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சி.பி.ஐ. கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான பெஞ்ச் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது. முன்னதாக அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தது குறிப்பிட்டத்தக்கது.






      Dinamalar
      Follow us