sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிக்னலே இல்லாமல் 100 கி.மீ. சாலை  பெங்களூருக்கு ரூ.12,000 கோடி நிதி

/

சிக்னலே இல்லாமல் 100 கி.மீ. சாலை  பெங்களூருக்கு ரூ.12,000 கோடி நிதி

சிக்னலே இல்லாமல் 100 கி.மீ. சாலை  பெங்களூருக்கு ரூ.12,000 கோடி நிதி

சிக்னலே இல்லாமல் 100 கி.மீ. சாலை  பெங்களூருக்கு ரூ.12,000 கோடி நிதி


ADDED : ஜூலை 31, 2024 04:23 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : பெங்களூரில் 100 கி.மீ., துாரத்திற்கு சிக்னல் இல்லாத சாலைகள் அமைக்க, கர்நாடக அரசு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.

பெங்களூரு நகரம், இன்று உலக அளவில் வேகமாக உயர்ந்துள்ளது. நகரில் 1.50 கோடி மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 10 நிமிடங்களில் சென்றடைய கூடிய இடத்திற்கு கூட செல்வதற்கு 45 நிமிடங்கள் ஆகிறது.

சுரங்கப்பாதை


பெங்களூரில் நிலவும் போக்குவரத்து பிரச்னை அரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. மெட்ரோ ரயில் சேவை துவங்கியும், போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சராக இருக்கும், துணை முதல்வர் சிவகுமார், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுரங்கப் பாதைகள், சிக்னல் இல்லாத சாலைகளை அமைக்கலாம் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

காலக்கெடு


இதையடுத்து கே.ஆர்., புரம்- - கோரகுன்டேபாளையா இடையில் 23 கி.மீ.,; ஆனேபாளையா -- சில்க் போர்டு இடையில் 5.5 கி.மீ.,; மாரேனஹள்ளி -- கனகபுரா ரோடு, தலகட்டபுரா -- நைஸ் ரோடு இடையில் தலா 10 கி.மீ., மினர்வா சதுக்கம்- - கப்பன் பார்க் இடையில் 2.7 கி.மீ., உட்பட 100 கி.மீ., துாரத்திற்கு சிக்னல் இல்லா சாலைகள் அமைப்பதற்காக பெங்களூரில் 17 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த திட்டம் தொடர்பாக, சமீபத்தில் நடந்த பெங்களூரு அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு அரசு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

ஆனால் திட்டத்தை முடிப்பதற்காக இன்னும் காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. சிக்னல் இல்லா சாலைகள் அமைப்பது தொடர்பாக விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us