sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமெரிக்காவிலிருந்து 119 பேர் இன்று பஞ்சாப் வருகை

/

அமெரிக்காவிலிருந்து 119 பேர் இன்று பஞ்சாப் வருகை

அமெரிக்காவிலிருந்து 119 பேர் இன்று பஞ்சாப் வருகை

அமெரிக்காவிலிருந்து 119 பேர் இன்று பஞ்சாப் வருகை


ADDED : பிப் 14, 2025 11:32 PM

Google News

ADDED : பிப் 14, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமிர்தசரஸ்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் வெளியேற்றப்படுகின்றனர்.

கடந்த மாதம் 20ம் தேதி, 104 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கையிலும், காலிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில், அவர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

அதற்கு பலத்த எதிர்ப்பு இந்தியாவில் கிளம்பிய நிலையில், இன்று இரவு 10:00 மணிக்கு, பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்படுகின்றனர்.

அவர்களில் 67 பேர் பஞ்சாப், 33 பேர் ஹரியானா, எட்டு பேர் குஜராத், மூன்று பேர் உத்தர பிரதேசம், தலா இருவர் கோவா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தலா ஒருவர் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் எவ்விதம் அழைத்து வரப்பட உள்ளனர் என்ற தகவல் இல்லை.






      Dinamalar
      Follow us