sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

13 பா.ஜ., கவுன்சிலர்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்

/

13 பா.ஜ., கவுன்சிலர்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்

13 பா.ஜ., கவுன்சிலர்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்

13 பா.ஜ., கவுன்சிலர்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்


ADDED : ஆக 19, 2024 10:51 PM

Google News

ADDED : ஆக 19, 2024 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி:

ஜுவர்கி நகராட்சியின் 13 பா.ஜ., கவுன்சிலர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, ம.ஜ.த.,வில் இணைந்தனர்.

கலபுரகி மாவட்டம், ஜூவர்கி நகராட்சியில் 23 வார்டுகள் உள்ளன. இவற்றில், பா.ஜ.,வுக்கு 17; காங்கிரஸ் 3; ம.ஜ.த., 3 உறுப்பினர்கள் இருந்தனர். பா.ஜ., வசம் நகராட்சி இருந்தது.

இந்நிலையில், பா.ஜ.,வின் 13 கவுன்சிலர்கள், நேற்று பெங்களூரில் மத்திய அமைச்சர் குமாரசாமி முன்னிலையில், ம.ஜ.த.,வில் இணைந்தனர். இவர்களை ம.ஜ.த.,வில் இணைக்க காரணமாக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., தொட்டப்ப கவுடா பாட்டீல்.

இவர், கடந்தாண்டு சட்டசபை தேர்தலில், ஜுவர்கியில் போட்டியிட சீட் தர பா.ஜ., மறுத்தது. இதனால் கோபமடைந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி ம.ஜ.த.,வில் இணைந்தார்.

ம.ஜ.த., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்விக்கு காரணமான பா.ஜ.,வை பழிவாங்கக் காத்திருந்து, தற்போது கவுன்சிலர்களை இழுத்து வந்துள்ளார்.

அதே நேரம், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ள நிலையில், தங்கள் கட்சி கவுன்சிலர்களை, ம.ஜ.த.,வினர் இழுத்ததால் உள்ளூர் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மாநில தலைவருக்கு, மாவட்ட தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கூட்டணியில் இருந்து கொண்டே, தங்கள் கட்சி கவுன்சிலர்களை இழுத்தது, மாநில பா.ஜ., தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜுவர்கி நகராட்சியில், பா.ஜ., மெஜாரிட்டியை இழந்துள்ளதால், ம.ஜ.த., நகராட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us