ADDED : ஆக 24, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : பெங்களூரில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக, 167 வழக்குகளை போக்குவரத்து போலீசார் பதிவு செய்தனர்.
இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார், அவ்வப்போது இரவு நேர வாகன சோதனை நடத்தி, வழக்கும் பதிவு செய்கின்றனர்.
ஆனாலும் விதிகளை மீறி, போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் குறையவில்லை.
வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு நகரின் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு முழுதும், 8,550 வாகன ஓட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
இதில், 167 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது உறுதியானது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.