sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

5 வயது சிறுமி பலாத்காரம் 17 வயது சிறுவன் கைது 

/

5 வயது சிறுமி பலாத்காரம் 17 வயது சிறுவன் கைது 

5 வயது சிறுமி பலாத்காரம் 17 வயது சிறுவன் கைது 

5 வயது சிறுமி பலாத்காரம் 17 வயது சிறுவன் கைது 


ADDED : ஆக 23, 2024 06:12 AM

Google News

ADDED : ஆக 23, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்: ஹாசன், சென்னராயபட்டணா ஹிரேசாவே கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் 17 வயது சிறுவன். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும், தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளார். சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்கு சென்றால், இரவில் தான் வீடு திரும்புவர். பள்ளி முடிந்ததும் சிறுமி மட்டும், வீட்டில் தனியாக இருப்பார்.

கடந்த சில நாட்களுக்கு முன், சிறுமி வீட்டிற்கு சென்ற சிறுவன், சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. இதனால் தினமும் சிறுமியை, பலாத்காரம் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் பரிசோதித்த போது, பலாத்காரம் செய்தது தெரிந்தது. சிறுமியிடம், பெற்றோர் கேட்ட போது, சிறுவனை பற்றி கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். சிறுவன் கைது செய்யப்பட்டு, சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

முதியவர் கைது


பெலகாவி, நிப்பானியை சேர்ந்தவர் ஆசிப் பகவான், 70. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 5 வயது சிறுமி, நேற்று காலை வீட்டின் முன்பு தனியாக விளையாடினார். 10 ரூபாய் தருவதாக கூறி, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார்.

அதிர்ச்சி அடைந்த சிறுமி, அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். ஆசிப்பை பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us