sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 கன்வர் யாத்ரீகர்கள் விபத்தில் உயிரிழப்பு

/

2 கன்வர் யாத்ரீகர்கள் விபத்தில் உயிரிழப்பு

2 கன்வர் யாத்ரீகர்கள் விபத்தில் உயிரிழப்பு

2 கன்வர் யாத்ரீகர்கள் விபத்தில் உயிரிழப்பு


ADDED : ஜூலை 26, 2024 08:41 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிஜ்னோர்:உத்தர பிரதேச மாநிலம் அப்சல்கரில் நேற்று ஏற்பட்ட விபத்தில், கன்வர் யாத்ரீகர்கள் இருவர் உயிரிழந்தனர். .

புனித மாதமான சிரவண மாதத்தின் முதல் வாரத்தில், உ.பி., உத்தரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில சிவ பக்தர்கள், பாதயாத்திரையாக கங்கை நதிக்கு வந்து புனித நீர் எடுத்துச் சென்று, தங்கள் ஊரிலுள்ள சிவாலயங்களில் அபிஷேகம் செய்வர். இதுவே, கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 30 கன்வர் யாத்ரீகர்கள் ஒரு குழுவாக நேற்று, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நேற்று மதியம் 2:30 மணிக்கு அப்சல்கர் அருகே எதிரில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், கன்வர் குழு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

பைக்கில் சென்ற, 4 கன்வர்கள் துாக்கி வீசப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவம்,24 மற்றும் அகிலேஷ், 22 ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us