ADDED : செப் 12, 2024 12:45 AM
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கதுவா - பசந்த்கர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, நேற்று ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவினர் ஜம்மு - காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக பாகிஸ்தானின் அக்னுாரில் உள்ள சர்வதேச எல்லைக்கோடு பகுதியில், பாக்., ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு நம் எல்லை பாதுகாப்பு படையினரும் தாக்கினர்.
இரு தரப்புக்கும் நடந்த மோதலில், நம் வீரர் காயம் அடைந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.