sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.20 லட்சம் கடன் வாங்கி வியாபாரியிடம் மோசடி

/

ரூ.20 லட்சம் கடன் வாங்கி வியாபாரியிடம் மோசடி

ரூ.20 லட்சம் கடன் வாங்கி வியாபாரியிடம் மோசடி

ரூ.20 லட்சம் கடன் வாங்கி வியாபாரியிடம் மோசடி


ADDED : செப் 03, 2024 10:48 PM

Google News

ADDED : செப் 03, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: இரும்பு வியாபாரியிடம் வாங்கிய 20 லட்சம் ரூபாய்க்காக நகல் எடுத்த நோட்டுகளை கொடுத்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு காட்டன்பேட்டில் வசிப்பவர் கார்த்திக், 35; இரும்பு வியாபாரி. வியாபாரத்திற்காக கடந்த ஆண்டு டில்லி சென்றபோது, பரத், 38, என்பவரின் அறிமுகம் கிடைத்தது. நண்பர்கள் ஆகினர். அடிக்கடி மொபைல் போனிலும் பேசினர்.

சில மாதங்களுக்கு முன், கார்த்திக்கிடம் மொபைல் போனில் பேசிய பரத், “எனக்கு அவசரமாக 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

பெங்களூரில் உள்ள எனது உறவினர் மூலம், பணத்தை திரும்ப தர ஏற்பாடு செய்கிறேன்,” என்று கூறினார்.

இதற்கு சம்மதித்த கார்த்திக், பரத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

கடந்த 1ம் தேதி கார்த்திக்கிடம், மொபைல் போனில் ஒருவர் பேசினார். தன் பெயர் ரமாகாந்த் என்றும், பரத்தின் உறவினர் என்றும் கூறினார்.

“பரத் உங்களுக்கு தர வேண்டிய 20 லட்சம் ரூபாயை, சிக்பேட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்து வாங்கிக் கொள்ளுங்கள்,” என்றார்.

அன்றைய தினமே, சிக்பேட்டிற்கு கார்த்திக் சென்றார். அவரை சந்தித்த ரமாகாந்த், ஒரு பண்டலை கொடுத்தார்.

இதற்குள் பணம் இருக்கிறது என்று கூறிவிட்டு கிளம்பினார். பின், பரத்திற்கு, கார்த்திக் மொபைல் போனில் பேசினார்.

அப்போது, “பண்டலை பிரித்துப் பார்க்க வேண்டாம்,” என, பரத் திரும்ப, திரும்ப கூறினார்.

கார்த்திக்கிற்கு சந்தேகம் ஏற்பட்டது. பண்டலை பிரித்து பார்த்தபோது, கலர் நகல் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

அதிர்ச்சி அடைந்த அவர் பரத்தை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. தன்னை ஏமாற்றியது குறித்து பரத், ரமாகாந்த் ஆகிய இருவர் மீதும், சிக்பேட் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் கார்த்திக் புகார் செய்தார்.

இருவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.






      Dinamalar
      Follow us