sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புறாக்களுக்கு உணவு வைத்தால் ரூ.200 அபராதம்

/

புறாக்களுக்கு உணவு வைத்தால் ரூ.200 அபராதம்

புறாக்களுக்கு உணவு வைத்தால் ரூ.200 அபராதம்

புறாக்களுக்கு உணவு வைத்தால் ரூ.200 அபராதம்


ADDED : மார் 28, 2024 04:18 AM

Google News

ADDED : மார் 28, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : 'புறாக்களுக்கு உணவு வைப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெங்களூரின் கப்பன் பார்க், ரேஸ்கோர்ஸ் சதுக்கம் உட்பட சில பகுதிகளில், சாலையோரம் புறாக்கள் கூட்டமாக நிற்கும். வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தி, தங்களிடம் இருக்கும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்களை, புறாக்களுக்கு அளிப்பது வழக்கம். ஆனால் புறாக்களின் இறக்கையால், மனிதர்களுக்கு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, சில மாதங்களுக்கு முன்பு, ஒரு தகவல் உலா வந்தது. இதனால் புறாக்களுக்கு உணவு வைக்க, மாநகராட்சி தடை விதித்தது.

ஆனாலும் ரேஸ்கோர்ஸ் சதுக்கத்தில், புறாக்கள் கூட்டமாக நிற்கும் இடத்தில், வாகன ஓட்டிகள் புறாக்களுக்கு, உணவு வைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த விவகாரம் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் சதுக்கத்தில், ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. 'புறாக்களுக்கு உணவு வைப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, எழுதப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.






      Dinamalar
      Follow us