sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளி கட்டடம் இடிந்து 22 மாணவர்கள் பலி

/

பள்ளி கட்டடம் இடிந்து 22 மாணவர்கள் பலி

பள்ளி கட்டடம் இடிந்து 22 மாணவர்கள் பலி

பள்ளி கட்டடம் இடிந்து 22 மாணவர்கள் பலி


ADDED : ஜூலை 13, 2024 11:22 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுஜா: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், பிளாட்டோ மாகாணத்தில் உள்ள ஜோஸ் நகரில் இரண்டு மாடிகள் கொண்ட பள்ளி செயல்பட்டு வந்தது.

நேற்று காலை பள்ளி துவங்கிய சிறிது நேரத்தில் அந்த கட்டம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 154 மாணவர்கள் தவித்தனர். இதில், 22 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர், இடிபாடுகளில் தவித்த மாணவர்களை மீட்டனர்.

இதில், 132 மாணவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகேயுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். விபத்தில் சிக்கிய மாணவர்களில் பலர், 15 வயதுக்கும் குறைவானவர்கள்.

நைஜீரியாவில் அடிக்கடி கட்டடங்கள் இடிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் விபத்துக்கு உள்ளாகின.

'ஆற்றங்கரையில் இந்த பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது; முறையாக பராமரிக்கப் படவில்லை.

'இது குறித்து, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதே இந்த விபத்துக்கு காரணம்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us