sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

/

மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

2


ADDED : ஆக 16, 2024 09:04 AM

Google News

ADDED : ஆக 16, 2024 09:04 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 25 சதவீத இளங்கலை மருத்துவ மாணவர்களும் (யு.ஜி.,), 15 சதவீத முதுகலை மருத்துவ மாணவர்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

25,590 இளங்கலை மாணவர்கள், 5,337 முதுகலை மாணவர்களிடம், மனஅழுத்தம் உள்ளதா என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 12 மாதங்களில் 16.2 சதவீத மருத்துவ மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். குறிப்பாக, 5,337 முதுகலை மாணவர்களில் 10 சதவீதத்திற்கு அதிமான மாணவர்கள் தற்கொலை முயற்சிகளுக்கு திட்டமிட்டுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

எட்டு மணி நேரம் ஓய்வு

25 சதவீத இளங்கலை மருத்துவ மாணவர்களும் (யு.ஜி.,), 15 சதவீத முதுகலை மருத்துவ மாணவர்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் வாரத்திற்கு 74 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் தினசரி எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

மன அழுத்தம்

தனியாக மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களால் மன அழுத்தத்தில் உள்ளாகியுள்ளனர். அரசு மருத்துவ கல்லூரிகளில் பணி நேரத்தில் ஆசிரியர்கள் பணியில் இல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். முதுகலை மாணவர்களுக்கு விடுதி வசதிகள் திருப்தி அளிக்கவில்லை. இதில் 50 சதவீதம் பேர் ஏழைகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us