sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெறி நாய் கடித்து 3 பசுக்கள் பலி: தொழிலாளர்கள் அச்சம்

/

வெறி நாய் கடித்து 3 பசுக்கள் பலி: தொழிலாளர்கள் அச்சம்

வெறி நாய் கடித்து 3 பசுக்கள் பலி: தொழிலாளர்கள் அச்சம்

வெறி நாய் கடித்து 3 பசுக்கள் பலி: தொழிலாளர்கள் அச்சம்


ADDED : செப் 11, 2024 12:43 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே வெறிநாய் கடித்து மூன்று பசுக்கள் பலியானதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட் ஆனமுடி டிவிஷனில் கடந்த மூன்று நாட்களாக சுற்றித் திரியும் வெறி நாய் பசுக்கள், வளர்ப்பு நாய்கள் ஆகியவற்றை கடித்து குதறியது.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தர்மராஜின் இரண்டு பசுக்கள், மாரிசாமியின் ஒரு பசு ஆகியவை இறந்தன.

வளர்ப்பு நாய்கள் அதிகளவில் வெறி நாய் கடித்து பாதிக்கப்பட்டுள்ளன.

வெறிநாயை பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மூணாறு ஊராட்சியில் தொழிலாளர்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் வீடுகளை விட்டு வெளியில் வரவும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.






      Dinamalar
      Follow us