sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டூவீலர் விபத்தில் 3 பேர் பலி

/

டூவீலர் விபத்தில் 3 பேர் பலி

டூவீலர் விபத்தில் 3 பேர் பலி

டூவீலர் விபத்தில் 3 பேர் பலி


ADDED : மே 04, 2024 02:01 AM

Google News

ADDED : மே 04, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே செண்பகதொழுகுடி பகுதியில் டூவீலர் விபத்தில் தாய், நான்கு வயது மகள் உட்பட மூன்று பேர் பலியாயினர்.

சின்னக்கானல் திடீர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், சகோதரர் செல்வம் ஆகியோர் எர்ணாகுளத்தில் குடும்பத்தினருடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் குடும்பத்துடன் திடீர் நகர் வந்தனர்.

இந்நிலையில் மணிகண்டன் மனைவி அஞ்சலி 27, மகள் அமேயா 4, செல்வம் மனைவி ஜென்சி 19, ஆகியோர் நேற்று டூவீலரில் சூரியநல்லிக்கு சென்றனர். அஞ்சலி அதனை ஓட்டினார். அங்கிருந்து மாலை 4:30 மணிக்கு திரும்புகையில் செண்பகதொழுகுடி பகுதியில் இறக்கத்தில் வந்தபோது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் 25 அடி தூரம் இழுத்துச் சென்றது.

இவ்விபத்தில் மூவரும் பலத்த காயம் அடைந்த நிலையில் அமேயா சம்பவ இடத்தில் இறந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஞ்சலி, ஜென்சி இறந்தனர். சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.செல்வம்- ஜென்சி தம்பதியினருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.






      Dinamalar
      Follow us