sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நேற்று காலை வரை சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

/

நேற்று காலை வரை சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

நேற்று காலை வரை சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

நேற்று காலை வரை சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ADDED : ஆக 30, 2024 12:37 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: பாகிஸ்தானிலிருந்து, ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தின் எல்லை வழியாக, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக பாதுகாப்பு படையினருக்க நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எல்லைப்பகுதியில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மச்சில் செக்டாரின் கும்கடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு, சந்தேகத்திற்கு இடமான சிலரின் நடமாட்டம் தென்பட்டது.

அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, பதிலுக்கு அவர்களும் சுட்டனர். நேற்று காலை வரை இந்த சண்டை தொடர்ந்தது.

இதே போல் கர்னாஹ் செக்டாரில் நேற்று முன்தினம் இரவு ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நள்ளிரவு வரை துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த இரண்டு தாக்குதலிலும், மொத்தம் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டில் இதுவரை குப்வாரா மாவட்டத்திற்குள் ஊடுருவ முயன்ற 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us