sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியல் தலைவர்கள் மீது அவதுாறு கர்நாடகாவில் 37 வழக்குகள் பதிவு

/

அரசியல் தலைவர்கள் மீது அவதுாறு கர்நாடகாவில் 37 வழக்குகள் பதிவு

அரசியல் தலைவர்கள் மீது அவதுாறு கர்நாடகாவில் 37 வழக்குகள் பதிவு

அரசியல் தலைவர்கள் மீது அவதுாறு கர்நாடகாவில் 37 வழக்குகள் பதிவு


ADDED : ஜூலை 24, 2024 11:25 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கர்நாடகாவில் அரசியல் தலைவர்கள் மீது சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பும் வகையில் பொய் செய்திகளை பதிவிட்டதாக, 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் அரசு தொடர்பாகவும், அரசியல் தலைவர்கள் தொடர்பாகவும் உண்மைக்கு மாறாக சமூக வலைதளத்தில் பொய் செய்திகள் பரவுகின்றன. இதை தடுக்கும் வகையில், போலி செய்திகளை பரப்புவோரை கண்டுபிடிப்பதற்காக, 2024 மார்ச்சில், மாநில அரசு, 'ஐ.டி.டி.யு., என்ற உண்மை சரிபார்ப்பு பிரிவு மையம்' துவக்கியது.

இந்த மையத்தினர், சமூக வலைதளங்களில் போலி செய்தியை பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்பாக, பொய் செய்தி பரப்பியதாக ஐந்து வழக்குகளும்;

முதல்வர் சித்தராமையா தொடர்பாக பொய் செய்தி பரப்பியதாக, 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவர்கள் மட்டுமின்றி, துணை முதல்வர் சிவகுமார், மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, மத்திய அமைச்சர் குமாரசாமி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, முன்னாள் எம்.பி., அனந்த் குமார் ஹெக்டே உட்பட பல அரசியல் தலைவர்கள் தொடர்பாக பொய் செய்திகள் பதிவேற்றப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.டி.டி.யு., மையத்தினர் 37 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரில் எட்டு, உத்தர கன்னடாவில் ஆறு, சிக்கமகளூரில் ஆறு, உடுப்பியில் ஐந்து, ஷிவமொகாவில் மூன்று, மங்களூரில் இரண்டு, கலபுரகியில் இரண்டு, ராம்நகர், சிக்கபல்லாபூர், பெலகாவி, குடகு, கதக்கில் தலா ஒரு வழக்குகள் பதிவாகி உள்ளன.

இம்மையத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சமூக வலைதளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளில் சந்தேகம் இருந்தால், அதை ஆய்வு செய்வோம். கடந்த 90 நாட்களில், 537 செய்திகளை ஆய்வு செய்துள்ளோம்' என்றனர்.

நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறுகையில், ''சமூக வலைதளங்களில் வெறுப்பு ஏற்படுத்தும் பதிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் நிலையங்கள் அல்லது உண்மை சரிபார்ப்பு மையம் மூலம் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கிறோம்.

''எங்களின் புலனாய்வு பிரிவினர், தனியாகவும் சமூக வலைதளங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us