ADDED : ஆக 17, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடுகோடி: பெங்களூரில் வீடு, அலுவலகங்களில் மடிக்கணினி, குடிநீர் குழாய்களை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
காடுகோடிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், அலுவலகங்களில், மடிக்கணினிகள், குடிநீர் குழாய்கள், தங்க நகைகள் திருடப்படுவதாக, போலீசாருக்கு பல புகார்கள் வந்தன.
விசாரணை நடத்திய போலீசார், பழைய பையப்பனஹள்ளியைச் சேர்ந்த அருண், 23, அஜய், 24, பிரதாப், 25, சாய், 25, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 கிராம் தங்க நகைகள், மடிக்கணினிகள், குடிநீர் குழாய்கள், இரு சக்கர வாகனங்கள் மீட்டனர்.
காடுகோடி போலீசார் விசாரிக்கின்றனர்.

