ஜம்மு காஷ்மீரில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
ஜம்மு காஷ்மீரில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
ADDED : ஜூலை 16, 2024 09:01 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் கடந்த 32 மாதங்களில் 48 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.