sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விதிமீறலான பண பரிமாற்றம் இருவருக்கு 4 ஆண்டு சிறை

/

விதிமீறலான பண பரிமாற்றம் இருவருக்கு 4 ஆண்டு சிறை

விதிமீறலான பண பரிமாற்றம் இருவருக்கு 4 ஆண்டு சிறை

விதிமீறலான பண பரிமாற்றம் இருவருக்கு 4 ஆண்டு சிறை


ADDED : ஏப் 29, 2024 05:14 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி, ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்ய முயற்சித்த இருவருக்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்தியாவில் 2016ல், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, ஆர்.பி.ஐ., ரத்து செய்தது. ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக, விதிமுறைகள் வெளியிட்டது. இதன்படி ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியது.

பல்லாரி, ஹொஸ்பேட்டின் டியாம் சாலையில் எஸ்.பி.எம்., வங்கி கிளையின் முன்னாள் தலைமை காசாளர் கோபால கிருஷ்ணா, எல்.ஐ.சி., ஏஜன்ட் ராகவேந்திரா ஆகியோர் ஆர்.பி.ஐ.,யின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்தனர்.

இது தொடர்பாக, ஆர்.பி.ஐ., அதிகாரிகள் அளித்த புகாரின்படி, சி.பி.ஐ.,யில் வழக்கு பதிவானது.

விசாரணையை முடித்த அதிகாரிகள், பெங்களூரின் சி.பி,ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கின் முதல் குற்றவாளியான கோபால கிருஷ்ணாவுக்கு, 2.10 லட்சம் ரூபாய்; இரண்டாவது குற்றவாளியான ராகவேந்திராவுக்கு 1.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us