sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

/

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்


ADDED : மே 09, 2024 05:19 AM

Google News

ADDED : மே 09, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு : மங்களூரு விமான நிலையத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு, கடந்த 6ம் தேதி நள்ளிரவு, துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. பயணியரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது உடைமைக்குள் மறைத்து வைத்து, தங்கம் கடத்தி வந்த, ஒரு பயணி கைது செய்யப்பட்டார். அவர் கேரளாவின் காசர்கோடு மொக்ரால் புத்துாரின் ஆசிப், 40, என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து 578 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்மதிப்பு 40 லட்சத்து 40 ஆயிரத்து 220 ரூபாய்.

துபாயில் வேலை செய்யும் ஆசிப், அங்கிருந்து தங்கம் கடத்தியது தெரிந்தது. அவரிடம் பஜ்பே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us