sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

5 வருஷம்; 10 ஆயிரம் பேர்; கணக்கு சொல்கிறார் மணிப்பூர் முதல்வர்!

/

5 வருஷம்; 10 ஆயிரம் பேர்; கணக்கு சொல்கிறார் மணிப்பூர் முதல்வர்!

5 வருஷம்; 10 ஆயிரம் பேர்; கணக்கு சொல்கிறார் மணிப்பூர் முதல்வர்!

5 வருஷம்; 10 ஆயிரம் பேர்; கணக்கு சொல்கிறார் மணிப்பூர் முதல்வர்!

3


ADDED : ஆக 03, 2024 10:04 AM

Google News

ADDED : ஆக 03, 2024 10:04 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: 'மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டுள்ளர்' என சட்டசபையில் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்தார்.

கடந்தாண்டு மே மாதம் முதல் நடந்து வரும் வன்முறை குறித்து, சட்டசபையில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பேசியதாவது: வன்முறையில் கூகி மற்றும் மெய்டி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த, 226 பேர் கொல்லப்பட்டனர்.

அத்தியாவசிய பொருட்கள்

நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திரும்ப கொடுக்க முயற்சிகளும் நடந்து வருகின்றன. நிவாரண முகாம்களில் உள்ள மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 3,483 விவசாயிகளுக்கு ரூ.18.91 கோடி பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.வீடுகள் சேதமடைந்த 2,792 குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது. 59, 414 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

11,892 வழக்குகள்

வன்முறை தொடர்பாக, 11,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் மியான்மர் , சீனா, வங்கதேசம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us