மாநகராட்சிக்கு ரூ.5,200 கோடி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்
மாநகராட்சிக்கு ரூ.5,200 கோடி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்
ADDED : ஆக 02, 2024 01:13 AM
விக்ரம் நகர்,:“நகரின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக எம்.சி.டி-., எனும் டில்லி மாநகராட்சிக்கு 5,200 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதப்படும்,” என, மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறினார்.
நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஹரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நகரங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசிடமிருந்து மானியங்களைப் பெறுகின்றன.
வடிகால், சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த எம்.சி.டி-.,க்கு மானியங்கள் தேவை.
மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போலவே எம்.சி.டி-.,யும் மத்திய அரசிடம் இருந்து மானியங்களைப் பெற வேண்டும். மாநகராட்சிக்கு 5,200 கோடி ரூபாய் வழங்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.