ADDED : ஜூலை 07, 2024 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூரத்,குஜராத்தில் பழமையான ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், ஒருவர் பலியானார். பலர் இடிபாடுகளில் சிக்கினர்.
குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் உள்ள சச்சின் பாலி கிராமத்தில் நேற்று இந்த விபத்து நடந்தது.
இந்த கட்டடத்தில் ஏழு குடும்பத்தினர் வசித்து வந்தனர். சம்பவத்தின் போது சிலர் வீடுகளில் இருந்துள்ளனர்.
கட்டடம் இடிந்து விழும் சத்தம் கேட்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில், ஒருவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்போரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.