sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தாவணகெரே கிராமத்தில் ஒரே நாளில் 7 பேர் இறப்பு

/

தாவணகெரே கிராமத்தில் ஒரே நாளில் 7 பேர் இறப்பு

தாவணகெரே கிராமத்தில் ஒரே நாளில் 7 பேர் இறப்பு

தாவணகெரே கிராமத்தில் ஒரே நாளில் 7 பேர் இறப்பு


ADDED : ஜூலை 12, 2024 07:02 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே; தாவணகெரேவின் ஹொசகுந்தவாடா கிராமத்தில், வெவ்வேறு காரணங்களால் நேற்று ஒரே நாளில், அடுத்தடுத்து ஏழு பேர் உயிரிழந்ததால், அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தாவணகெரே மாவட்டத்தில், ஹொசகுந்தவாடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 5,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ஆனால், நேற்று எங்கு பார்த்தாலும் மக்கள் அழுது கொண்டே இருந்ததை காண முடிந்தது. இதற்கு, ஒரே நாளில் ஏழு பேர் இறந்தது தான் காரணம்.

மாரஜ்ஜி, 60, சாந்தம்மா, 65, ஆகியோர் வயது மூப்பு காரணமாகவும்; சந்தோஷ், 32, பீமக்கா, 60, ஆகியோர் வயிற்று போக்கு காரணமாகவும்; ஈரம்மா, 65, சுனில், 25, ஆகியோர் காய்ச்சல் காரணமாகவும்; பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறலாலும் இறந்தனர்.

நேற்று மட்டுமே அடுத்தடுத்து மரண சம்பவங்கள் நிகழ்ந்ததால், மொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. கிராமத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கும் மயானம் இல்லாததால், அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். கலெக்டர் நேரில் வந்து பிரச்னையை தீர்த்து வைக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us