ADDED : மே 11, 2024 06:47 AM
பெங்களூரு: கர்நாடகாவில் மின்னல் தாக்கி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 850 பேர் பலியாகி உள்ளனர். இதை தவிர்க்கும் வகையில், கர்நாடக மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய வழிமுறைகளை கூறியுள்ளது.
உலகளாவிய கால நிலைமாற்றம், புவி வெப்பமயமாதல், நீர் நிலைகளின் வீழ்ச்சி, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவை மேகங்கள் மோதலால் மின்னல் தீவிரமடைய முக்கிய காரணமாக அமைகின்றன.
விவசாயம், மாடு மேய்ப்பவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் மின்னல் தாக்குதலுக்கு அதிகம் பலியாகின்றனர். கர்நாடகாவில் மழைக்காலத்திற்கு முன் மற்றும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 95 சதவீதம் மின்னல் தாக்கும்.
கர்நாடகாவில் 2020 - 2023 வரை 9 லட்சத்து, 80 ஆயிரத்து, 169 முறை மின்னல் தாக்குதல் நடந்துள்ளன.
அதேநேரத்தில், 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2 லட்சத்து, 5 ஆயிரத்து, 25 மின்னல் தாக்குதல் நடந்துள்ளன. அதிகபட்சமாக மே மாதத்தில் 21 முறை மின்னல் தாக்குதல் நடத்துள்ளது.
மின்னல் தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், மித்ரா ஹெல்ப் லைன் உள்ளது.
மத்திய அரசின், 'தமனி' மின்னல் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், மின்னல் தாக்குதலை 40 நிமிடங்களுக்கு முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம்.