sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.யில் சோகம்! லாரியில் மோதிய டபுள் டெக்கர் பஸ்! 9 பேர் பலி

/

உ.பி.யில் சோகம்! லாரியில் மோதிய டபுள் டெக்கர் பஸ்! 9 பேர் பலி

உ.பி.யில் சோகம்! லாரியில் மோதிய டபுள் டெக்கர் பஸ்! 9 பேர் பலி

உ.பி.யில் சோகம்! லாரியில் மோதிய டபுள் டெக்கர் பஸ்! 9 பேர் பலி

1


ADDED : டிச 06, 2024 05:19 PM

Google News

ADDED : டிச 06, 2024 05:19 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ; உ.பி.யில் டபுள் டெக்கர் பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் கனோஜ் மாவட்டம் ஆக்ரா-லக்னோ விரைவு சாரையில் 40 பயணிகளுடன் டபுள் டெக்கர் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த செடிகளுக்கு லாரி டிரக்கில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஊற்றப்பட்டு கொண்டிருந்தது.

தண்ணீர் லாரி நிறுத்தப்பட்டதை பஸ் டிரைவர் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. அசுர வேகத்தில் வந்த பஸ், லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 9 பேர் பலியாகினர். 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் பஸ்சும், லாரியும் பெரும் சேதம் அடைந்தது.

அதே நேரத்தில் அவ்வழியே உ.பி. மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் ஸ்வதந்திரதேவ் சிங் சென்றுகொண்டிருந்தார். விபத்தைக் கண்ட அவர் உடனடியாக தமது பாதுகாவலர்களை அனுப்பி, சிக்கியவர்களை மீட்க உதவி செய்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியும் வைத்தார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பஸ் டிரைவர் தூங்கிவிட்டதால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us