sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொசுக்களால் பரவும் நோய்கள் 90 சதவீதம் அதிகரிப்பு

/

கொசுக்களால் பரவும் நோய்கள் 90 சதவீதம் அதிகரிப்பு

கொசுக்களால் பரவும் நோய்கள் 90 சதவீதம் அதிகரிப்பு

கொசுக்களால் பரவும் நோய்கள் 90 சதவீதம் அதிகரிப்பு


ADDED : ஜூன் 14, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜந்தர் மந்தர்:டில்லியில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ல் கொசுக்களால் பரவும் தொற்றுநோய்கள் 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் தொற்றுநோய்களின் தாக்கம் 2022ம் ஆண்டை விட கடந்த ஆண்டு மழைக்காலத்தில் 90 சதவீதம் அதிகமாக இருந்தது.

இதனால் வரும் பருவ மழைக்காலத்தில் கொசுக்களால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2022ல் கொசுக்களால் பரவும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,71,931ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டிலோ 3,25,875ஆக உயர்ந்தது. இது 90 சதவீதம் அதிகம்.

நோட்டீஸ்


நோய் பரப்பும் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தவர்களுக்கு மாநகராட்சி சட்டபூர்வமான நடவடிக்கைக்கான நோட்டீஸ் வழங்குகிறது. இது முந்தைய ஆண்டை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2022ல் 3 கோடியே, 60 லட்சத்து, 76,419 வீடுகளில் ஆய்வு செய்து, 1,22,282 வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது.

கடந்த 2023ம் ஆண்டில் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 கோடியே 14 லட்சத்து, 76 ஆயிரத்து, 581 வீடுகளில் ஆய்வு செய்த மாநகராட்சி, 1,72,481 வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. இது முந்தைய ஆண்டை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், 2023 ஆகஸ்ட் 7ம் தேதி முதல் கொசுக்களால் பரவும் நோய்களின் பாதிப்பு குறித்த வாராந்திர புள்ளி விபரங்கள் வெளியிடுவதை மாநகராட்சி நிறுத்திவிட்டது. ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இது நிறுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொசு உற்பத்திக்கு வழக்கு

கொசு உற்பத்தியை தடுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்துவதை மாநகராட்சி அதிகரித்துள்ளது. நோய் பரப்பும் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. கொசு ஒழிப்பில் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதனால் மாநகராட்சியின் மலேரியா மற்றும் பிற கொசுக்களால் பரவும் நோய்கள் துணைச் சட்டங்கள் - 1975ஐ மீறியதற்காக சம்பந்தப்பட்ட கட்டட அல்லது வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடரப்படுகிறது.








      Dinamalar
      Follow us