இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த 2 வயது சிறுமி
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த 2 வயது சிறுமி
ADDED : மே 12, 2024 06:58 AM

பி.டி.எம்., லே - அவுட்: பல சாதனைகள் புரிந்து 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' இரண்டு வயது சிறுமி இடம் பிடித்துள்ளார்.
பாகல்கோட்டையை சேர்ந்தவர்கள் சுப்ரீத் மஷல்கர் - ஸ்ரவ்யா மஷல்கர். இவர்களுக்கு 5 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். தற்போது பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் மகள் ஸ்வரம்ஷி, 15 நிறுவன கார்களின் பெயர், 10 விலங்குகளின் பெயர், ஒன்பது வடிவங்கள் பெயர், மனித உடலின் 18 பாகங்கள், 11 பறவைகள்;
8 கிரகங்கள், 14 செயல் வார்த்தைகள், 7 பூச்சிகள்,11 வண்ணங்கள், 10 பழங்கள், 10 காய்கறிகள், ஒன்று முதல் 25 வரை எண்ணுதல், 11 ஆங்கில நர்சரி ரைம்கள் வாசித்தல், 3 புதிர்களை தீர்க்கிறார்.
இரண்டு வயதே ஆன ஸ்வரம்ஷி, நர்சரி பள்ளிக்கு செல்லாமல், தனது அண்ணன் படிக்கும் பாடத்தை, தானும் படித்து அறிவை பெற்றுள்ளார்.
இவர் கூறும் வார்த்தைகள், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டு'க்கு, அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
அவர்கள் வீடியோவை ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழை வழங்கி உள்ளனர்.
குழந்தையின் தாய் ஸ்ரவ்யா மஷல்கர் கூறியதாவது:
ஒன்றரை ஆண்டுகளில் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டாள். அவரது அண்ணன் படிக்கும்போதும், விளையாடும் போதும் பேசுவதை தெரிந்து கொண்டாள்.
இவள் கூறுவதை எனது நண்பர் ஒருவர் கேட்டு, இதை 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சு'க்கு விண்ணப்பிக்க கூறினார்.
அதன்படி, நாங்களும் எனது மகளின் வீடியோக்களை, 15 பிரிவுகளின் கீழ் அனுப்பி வைத்தோம். அனைத்து பிரிவுகளிலும் எனது மகள் தேர்வானார்.
இரண்டு வயது ஒரு மாதத்தில், என் மகள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழுடன் 2 வயது சிறுமி ஸ்வரம்ஷி. இடம்: பெங்களூரு.