sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கம்பி வேலியில் சிக்கிய 4 வயது சிறுத்தை பலி

/

கம்பி வேலியில் சிக்கிய 4 வயது சிறுத்தை பலி

கம்பி வேலியில் சிக்கிய 4 வயது சிறுத்தை பலி

கம்பி வேலியில் சிக்கிய 4 வயது சிறுத்தை பலி


ADDED : மே 24, 2024 04:04 AM

Google News

ADDED : மே 24, 2024 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ளது வாழப்புழை கிராமம். நேற்று முன்தினம் அதிகாலை தென்னந்தோப்பில் அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கியது.

வனத்துறையினர் பல மணி நேரம் போராடியும் சிறுத்தையை மீட்க முடியவில்லை. மதியம், 12:30 மணிக்கு, வனத்துறை மருத்துவ குழு, மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையை மீட்டனர். கூண்டில் ஆக்ரோஷமாக இருந்த சிறுத்தை, திடீரென உயிரிழந்தது.

தலைமை கால்நடை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் கூறுகையில், ''இறந்தது 4 வயது பெண் சிறுத்தை. கம்பிவேலியில் சிக்கியதால் உடல் உட்புற உறுப்புகளில் ஏற்பட்ட காயம் கரணமாக பலியாகி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின், சிறுத்தையின் உடல் வனத்தில் அடக்கம் செய்யப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us