sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காட்டு பன்றிக்கு விரித்த வலையில் சிக்கியது கரடி

/

காட்டு பன்றிக்கு விரித்த வலையில் சிக்கியது கரடி

காட்டு பன்றிக்கு விரித்த வலையில் சிக்கியது கரடி

காட்டு பன்றிக்கு விரித்த வலையில் சிக்கியது கரடி


ADDED : மே 05, 2024 05:46 AM

Google News

ADDED : மே 05, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாலுார்: மாலுாரின் டேக்கல் அருகே உள்ள மிட்டகான ஹள்ளி -- பண்டூர் அக்ரஹாரா இடையே உள்ள தைல மரத்தோப்பில் காட்டுப் பன்றிக்கு விரித்திருந்த வலையில் கரடி ஒன்று சிக்கியது.

வனப் பகுதியில் இருந்து டேக்கல், மிட்டகான ஹள்ளி, அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள், கரடிகள், மான்கள் என, வன விலங்குகள் நடமாடுவது வழக்கம்.

இதனால் சுற்றுப்புற பகுதிகளில் விளைப்பொருட்கள் நாசமாவதும், கால்நடைகள் பலியாவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

காட்டுப் பன்றிகளை பிடிக்க சில மர்ம நபர்கள் தைல மரத் தோப்பில் வலை விரித்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு கரடி ஒன்று, இந்த வலையில் சிக்கியது. வெளியே வர முயன்றும், அதன் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கரடி பயங்கரமாக சத்தமிட்டது.

இதைக் கேட்ட கிராம மக்கள், சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். வலைக்குள் சிக்கியிருந்த கரடிக்கு மயக்க மருந்து செலுத்தினர். பத்திரமாக வேனில் ஏற்றி பன்னர்கட்டா வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us