sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொடூர கொலை

/

காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொடூர கொலை

காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொடூர கொலை

காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொடூர கொலை


ADDED : ஜூன் 25, 2024 10:44 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கைமனம் விவேக் நகரை சேர்ந்தவர் தீபு, 44. இவர் மண் அள்ளும் இயந்திரங்களை விற்பனை செய்து வந்தார்.

இவரின் மனைவி விதுமோள், பாலக்காட்டில் அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாயுடன், காரில் கோவைக்கு தனியே புறப்பட்டார்.

மகிந்திரா எக்ஸ்.யு.வி., காரில் சென்ற அவருடன், டிரைவர் செல்லவில்லை.நள்ளிரவில் இவரது காரின் இண்டிகேட்டர் விளக்குகள் எரிந்தபடி, களியக்காவிளை ஒற்றை மரம் பெட்ரோல் பங்க் அருகே நீண்ட நேரமாக நின்றது. பொதுமக்கள் பார்த்தபோது, உள்ளே கழுத்து அறுபட்ட நிலையில், தீபு இறந்து கிடந்தார்.

கார் கண்ணாடிகளை உடைத்து, அவரை வெளியே எடுத்த போலீசார், அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். அவர் வைத்திருந்த பணத்தையும் காணவில்லை.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கார் அப்பகுதியில் நின்ற சிறிது நேரத்தில், காரிலிருந்து ஒருவர் இறங்கி நடந்து செல்வது தெரிந்தது.

இதை வைத்து பார்க்கும் போது, செல்லும் வழியில், யாரோ ஒருவர் அவர் காரில் ஏறி, அவர் வைத்திருந்த, 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து, அவரை கொலை செய்து இறங்கியிருக்கலாம் என, கருதப்படுகிறது.

அவரின் கொடூர கொலைக்கு காரணம் என்ன; எதனால் கொலை நடந்தது என, களியக்காவிளை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us