ADDED : ஜூன் 22, 2024 04:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாவேரி : குடும்ப தகராறில் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாவேரி ஹனகல் சிவபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகரப்பா, 60. இவரது மனைவி நாகவ்வா, 58. இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
தினமும் வேலை முடிந்ததும், சேகரப்பா குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சேகரப்பா, மனைவியிடம் தகராறு செய்து அடித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்து, நாகவ்வா தலையில் அடித்து விட்டு சேகரப்பா தப்பிச் சென்றார்.
தலையில் பலத்த காயமடைந்த நாகவ்வா பரிதாபமாக இறந்தார். ஹனகல் போலீசார், நேற்று காலையில் சேகரப்பாவை கைது செய்தனர்.