sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பச்சிளம் குழந்தையை வீசி சென்ற பெற்றோர்

/

பச்சிளம் குழந்தையை வீசி சென்ற பெற்றோர்

பச்சிளம் குழந்தையை வீசி சென்ற பெற்றோர்

பச்சிளம் குழந்தையை வீசி சென்ற பெற்றோர்


ADDED : ஆக 23, 2024 11:13 PM

Google News

ADDED : ஆக 23, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா: கட்டுமான பணிகள் நடக்கும் கட்டடத்தில் ஏழு மாத பச்சிளம் பெண் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோரை, போலீசார் தேடி வருகின்றனர்.

விஜயபுரா நகரின் பத்மாவதி காலனியில், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடக்கின்றன. நேற்று காலையில், சிலர் இந்த வழியாக நடைபயிற்சி சென்றனர். அப்போது, அந்த கட்டடத்தில் இருந்து, குழந்தையின் அழுகுரல் கேட்டது. உள்ளே சென்று பார்த்த போது, பிறந்து ஏழு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பது தெரிந்தது.

அப்பகுதியினர் குழந்தையை துாக்கி, சமாதானம் செய்து பால் புகட்டினர். கட்டட உரிமையாளர் கிருஷ்ணப்பாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர், ஆதர்ஷா நகர் போலீசாருக்கும், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். குழந்தையை துணியில் சுற்றி வைத்திருந்தனர். பத்மாவதி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us