sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மெய்டி ஆதரவு ஆயுத குழு மீது நடவடிக்கை: பைரேன் சிங் உறுதி

/

மெய்டி ஆதரவு ஆயுத குழு மீது நடவடிக்கை: பைரேன் சிங் உறுதி

மெய்டி ஆதரவு ஆயுத குழு மீது நடவடிக்கை: பைரேன் சிங் உறுதி

மெய்டி ஆதரவு ஆயுத குழு மீது நடவடிக்கை: பைரேன் சிங் உறுதி

1


ADDED : செப் 02, 2024 01:25 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:25 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்,: ''கூகி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால், மெய்டி ஆதரவு ஆயுதக் குழுவான ஆரம்பாய் தென்கோல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

பெரும் சேதம்


இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே, கடந்தாண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

தற்போது ஓரளவுக்கு அமைதி ஏற்பட்டாலும், பிரச்னை தொடர்கிறது.

இந்நிலையில், மெய்டி சமூகத்தினருக்கு ஆதரவான, ஆரம்பாய் தென்கோல் என்ற ஆயுதம் ஏந்திய குழு, பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூகி சமூகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து முதல்வர் பைரேன் சிங் கூறியுள்ளதாவது:

இந்த அமைப்பு ஒரு கலாசார அமைப்பாகவே இருந்தது. மாநிலத்தின் மோதல் துவங்கிய நேரத்தில், போதிய போலீஸ் இல்லாத நிலையில் அவர்கள் ஆயுதத்தை எடுத்துள்ளனர். இந்த அமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டது. மத ரீதியிலோ, தேச விரோதமாகவோ செயல்படக்கூடாது. அவ்வாறு கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருவர் பலி


இதனால், கடந்த ஐந்து மாதங்களாக அமைதி நிலவுகிறது. இதை மீறி அவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள கொடூர்ன் என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் மீது, ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் நேற்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.

இதில் ஒரு பெண் உட்பட இருவர் பலியாகினர். ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதை அடுத்து, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us