sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நடிகர் துவாரகீஷ் உடல் தகனம்

/

21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நடிகர் துவாரகீஷ் உடல் தகனம்

21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நடிகர் துவாரகீஷ் உடல் தகனம்

21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நடிகர் துவாரகீஷ் உடல் தகனம்


ADDED : ஏப் 18, 2024 04:30 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : மறைந்த பிரபல நடிகர் துவாரகீஷ் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கன்னடம், தமிழ், ஹிந்தி மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து, இயக்கி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் துவாரகீஷ், 81. தன் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி வீட்டில் நேற்று முன்தினம் துவாரகீஷ் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று காலை அவரது உடல், ரவீந்திரா கலாஷேத்திராவில் வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் சித்தராமையா, கன்னட வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் தங்கடகி, நடிகர்கள் முக்கிய மந்த்ரி சந்துரு, ராகவேந்திரா ராஜ்குமார்.

சுதீப், யஷ், ஜக்கேஷ், ரவிச்சந்திரன், அனிருத், ரமேஷ் அரவிந்த், குமார் கோவிந்த், ஸ்ரீமுரளி; நடிகையர் சுமலதா, மாளவிகா அவினாஷ், சுதாராணி, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், இசையமைப்பாளர் மனோகர், இயக்குனர் மஞ்சு உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின், அங்கிருந்து சாம்ராஜ்பேட்டில் உள்ள டி.ஆர்.மில் ஹிந்து மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. போலீசாரின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.

பின், மின் மயானத்தில், பிராமண முறைப்படி துவாரகீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. மூத்த மகன் யோகேஷ் இறுதி சடங்கு செய்தார். உடன் மனைவி, மற்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

பிரதமர் மோடி இரங்கல்

'எக்ஸ்' வலைதளத்தில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு:பல தசாப்தங்களாக மறக்க முடியாத நடிப்பு மற்றும் அற்புதமான திரைப்படங்கள் மூலம் திரைப்படத் துறைக்கு துவாரகீஷ் மகத்தான பங்களிப்பு அளித்துள்ளார். ரசிகர்களை கவரும் வகையிலும், இளம் திறமையாளர்களை ஆதரிக்கும் வகையிலும், தன் பன்முக பாத்திரத்தின் மூலம் கன்னட சினிமாவை, வடிவமைத்தார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது அசாதாரண பயணத்தை எப்போதும் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us