ADDED : மே 03, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி நாங்லோய் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இ-மெயில் வந்தது.
நங்லோய் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும், சிறப்புப் படையினர் இதுகுறித்து விசாரித்து வந்தனர்.
அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனை கண்டுபிடித்தனர். விளையாட்டுக்காக இ-மெயில் அனுப்பியதாக கூறினான். பின், அவனுக்கு அறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.