sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில் பயணிகளை பயமுறுத்த முயற்சியா? அமைச்சர் வைஷ்ணவ் கேள்வி

/

ரயில் பயணிகளை பயமுறுத்த முயற்சியா? அமைச்சர் வைஷ்ணவ் கேள்வி

ரயில் பயணிகளை பயமுறுத்த முயற்சியா? அமைச்சர் வைஷ்ணவ் கேள்வி

ரயில் பயணிகளை பயமுறுத்த முயற்சியா? அமைச்சர் வைஷ்ணவ் கேள்வி

6


ADDED : ஆக 01, 2024 04:52 PM

Google News

ADDED : ஆக 01, 2024 04:52 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரயிலில் தினமும் பயணம் செய்யும் 2 கோடி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா? என லோக்சபாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பினார்.

'கடந்த சில தினங்களாக ரயில் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. தோல்விகளுக்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. விபத்துக்களை தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன' என லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசியதாவது: கடந்த இரண்டு மாதங்களில், 4 சரக்கு ரயில்கள் தடம் புரண்டன. இதற்கு ரயில்வே அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவில்லை. கடந்த ஆண்டில், ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 300 பேர் இறந்தனர் என்றார்.

மத்திய அமைச்சர் பதில்

இதற்கு, அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: 58 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் அதிக ரயில் விபத்துக்கள் நடந்தன. அவர்களது ஆட்சி காலத்தில் ஒரு ரயிலில் கூட தானியங்கி பாதுகாப்பு சாதனத்தை கூட பொருத்தாதது ஏன் ?

அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படும். சமூக ஊடகங்கள் மூலம் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி, தினசரி பயணம் செய்யும் 2 கோடி பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாட்டு மக்களிடையே காங்கிரஸ் இப்படி தான் அச்சத்தை ஏற்படுத்துமா? என்றார்.






      Dinamalar
      Follow us