sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

50 ஆண்டுகளில் இல்லாத கனமழை வெள்ளக்காடான ஆந்திர மாவட்டங்கள்

/

50 ஆண்டுகளில் இல்லாத கனமழை வெள்ளக்காடான ஆந்திர மாவட்டங்கள்

50 ஆண்டுகளில் இல்லாத கனமழை வெள்ளக்காடான ஆந்திர மாவட்டங்கள்

50 ஆண்டுகளில் இல்லாத கனமழை வெள்ளக்காடான ஆந்திர மாவட்டங்கள்

3


UPDATED : செப் 02, 2024 05:19 AM

ADDED : செப் 02, 2024 01:34 AM

Google News

UPDATED : செப் 02, 2024 05:19 AM ADDED : செப் 02, 2024 01:34 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயவாடா: ஆந்திராவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்ததை அடுத்து, விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியதை அடுத்து, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

ஆந்திராவில் விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா, அமராவதி, மங்களகிரி, ஏலுாரு, பாபட்லா, என்.டி.ஆர்., உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால், இந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக

பாதிக்கப்பட்டது.

விஜயவாடா, அமராவதி, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது பெய்த பலத்த மழையால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஆந்திர உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா நேற்று கூறியதாவது:

ஆந்திராவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. விஜயவாடா உள்ளிட்ட மாவட்டங்களில், 27 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், விபத்துகளில் சிக்கி, இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 294 கிராமங்களில் இருந்து, 13,000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயவாடா, அமராவதி, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 62,644 ஹெக்டேர் நெல் பயிர்களும், 7,218 ஹெக்டேர் பழந்தோட்டங்களும் நீரில் மூழ்கின. அனைத்து மாவட்டங்களிலும் கட்டளை மையங்கள் அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மழை நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக மீட்கும்படி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்று, மீட்புப் பணிகளை அவர் விரைவுபடுத்தினார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு ரயில் நிலையங்களின் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், 99 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. 54 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. 'ஆந்திரா, தெலுங்கானாவில் வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக் கூடும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெலுங்கானாவிலும் கனமழை

தெலுங்கானாவின் ஹைதராபாத், கம்மம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. கம்மம் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை நிலவரம் குறித்து, அதிகாரிகளுடன், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அவர் உத்தரவிட்டார். மேலும், பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிடும்படி, அமைச்சர்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.








      Dinamalar
      Follow us