sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்., மறை மாவட்டத்துக்கு 2 துணை பேராயர் நியமனம் 

/

பெங்., மறை மாவட்டத்துக்கு 2 துணை பேராயர் நியமனம் 

பெங்., மறை மாவட்டத்துக்கு 2 துணை பேராயர் நியமனம் 

பெங்., மறை மாவட்டத்துக்கு 2 துணை பேராயர் நியமனம் 

1


ADDED : ஆக 23, 2024 06:21 AM

Google News

ADDED : ஆக 23, 2024 06:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு உயர் மறை மாவட்ட பேராயத்திற்கு, இரண்டு புதிய துணை பேராயர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு உயர் மறை மாவட்டத்திற்கு ஆரோக்கிய ராஜ் சதீஷ்குமார், ஜோசப் சூசைநாதன் ஆகியோர் புதிய துணை பேராயர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் இருவரும் பேராயத்தின் முன்னேற்றத்திற்கு, முக்கிய பங்கு ஆற்றுவர் என்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

புதிய துணை பேராயர் ஆரோக்கியராஜ் சதீஷ்குமார், குட்டதஹள்ளியில் உள்ள, புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிறந்து வளர்ந்தவர். இளங்கலை பட்டதாரியான இவர், கடந்த 1994ல் தனது மத பயணத்தை துவங்கினார். பல தேவாலயங்களில் மக்களுக்கு சேவை ஆற்றி உள்ளார்.

மற்றொரு துணை பேராயர் ஜோசப் சூசைநாதன், கோலார் மாவட்டம், தங்கவயலை சேர்ந்தவர். தற்போது பெங்களூரு ரிச்மென்ட் ரோட்டில் உள்ள, புனித இருதய தேவாலயத்தின் பங்கு தந்தையாக உள்ளார்.

இவர்கள் இருவரும், பெங்களூரு துாய சவேரியார் பேராலயத்தில் நாளை காலை 9:00 மணிக்கும் நடக்கும் நிகழ்வில் பதவியேற்கின்றனர். இதில் உயர் மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ உட்பட அருட்தந்தைகள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us