sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2ம் கட்ட ஓட்டுப்பதிவு அமைச்சர்கள் நியமனம்

/

2ம் கட்ட ஓட்டுப்பதிவு அமைச்சர்கள் நியமனம்

2ம் கட்ட ஓட்டுப்பதிவு அமைச்சர்கள் நியமனம்

2ம் கட்ட ஓட்டுப்பதிவு அமைச்சர்கள் நியமனம்


ADDED : ஏப் 29, 2024 06:44 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: லோக்சபா தேர்தலின், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் வட மாவட்டங்களுக்கு, அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, கர்நாடக காங்கிரஸ் தலைமை கட்டளையிட்டுஉள்ளது.

கர்நாடகாவின் வட மாவட்டங்களின் 14 லோக்சபா தொகுதிகளுக்கு, மே 7ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதை தீவிரமாக கருதியுள்ள காங்கிரஸ், 13 அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.

தாவணகெரேவுக்கு பரமேஸ்வர், தார்வாடுக்கு தினேஷ் குண்டுராவ், உத்தரகன்னடாவுக்கு ஜார்ஜ்,, சிக்கோடிக்கு சுதாகர், ஹாவேரிக்கு கிருஷ்ண பைரேகவுடா, பல்லாரிக்கு ராமலிங்கரெட்டி, பெலகாவிக்கு சுதாகர்.

கொப்பாலுக்கு பைரதி சுரேஷ், ராய்ச்சூருக்கு முனியப்பா, பீதருக்கு வெங்கடேஷ், ஷிவமொகாவுக்கு செலுவராயசாமி, விஜயபுராவுக்கு மஹாதேவப்பா, பாகல்கோட்டுக்கு ராஜண்ணா பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கலபுரகிக்கு பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை.

அனைத்து தொகுதிகளிலும், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, மாநில காங்., தலைவர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us