sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்., மாநகராட்சி பள்ளிகளுக்கு கல்வி ஆலோசகர்கள் நியமனம்

/

பெங்., மாநகராட்சி பள்ளிகளுக்கு கல்வி ஆலோசகர்கள் நியமனம்

பெங்., மாநகராட்சி பள்ளிகளுக்கு கல்வி ஆலோசகர்கள் நியமனம்

பெங்., மாநகராட்சி பள்ளிகளுக்கு கல்வி ஆலோசகர்கள் நியமனம்


ADDED : ஜூன் 02, 2024 05:48 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கிலும் கல்வி ஆலோசகர்களை மாநகராட்சி கல்விப்பிரிவு நியமித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரு மாநகராட்சியின் பள்ளி, கல்லுாரிகளில் கல்வி தரம், மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக கல்வி ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

கடந்த முறை கல்வித்துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் கெஞ்சேகவுடா, தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இவருடன் சேர்த்து, கல்வித்துறை ஓய்வு பெற்ற இணை இயக்குனர் ராமாஞ்சனேயா, பெங்களூரு மாநகராட்சியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஓபலேஷப்பா ஆகியோர் கல்வி ஆலோசகராக நியமிக்கப்பட்டனர். இம்முறையும் இவர்களே செயல்படுவர்.

இவர்கள் மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் கல்வி தரம் மற்றும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆலோசனை கூறுவர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.






      Dinamalar
      Follow us