ADDED : ஏப் 26, 2024 09:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:ஜனநாயக ஜனதா கட்சி தேசிய பொதுச் செயலர் பிரிஜ் சர்மா,  அக்கட்சியின் ஹரியானா மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநில தலைவராக இருந்த நிஷான் சிங், இம்மாத துவக்கத்தில் கட்சியில் இருந்து விலகினார்.
முன்னாள் எம்.பி., அஜய் சிங் சவுதாலா தலைமையில் இயங்கும் ஜனநாயக ஜனதா கட்சி கடந்த மாதம், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது.
ஹரியானாவில் மே 25ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக கூறியுள்ள ஜே.ஜே.பி., சில தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளது.

