sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலீஸ் ஜீப்பில் மோதி தப்பிக்க முயற்சி: போதை கும்பல் சிக்கியது

/

போலீஸ் ஜீப்பில் மோதி தப்பிக்க முயற்சி: போதை கும்பல் சிக்கியது

போலீஸ் ஜீப்பில் மோதி தப்பிக்க முயற்சி: போதை கும்பல் சிக்கியது

போலீஸ் ஜீப்பில் மோதி தப்பிக்க முயற்சி: போதை கும்பல் சிக்கியது

4


ADDED : ஜூன் 30, 2024 02:30 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:30 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி போலீசார், நேற்று காலை கோவை- - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், தோணிக்கடவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பழயன்னுார் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்திய போது, அதிவேகமாக வாணியம்பாறை பகுதியை நோக்கி சென்ற அக்காரை, பின் தொடர்ந்து சென்ற போலீசார், ஹைவே போலீசாரிடம் தகவலை தெரிவித்தனர்.

வாணியம்பாறை அருகே, காரை தடுக்க முயன்ற போக்குவரத்து எஸ்.ஐ., மோகன்தாஸ் தலைமையிலான போலீசாரின் ஜீப்பில் மோதிவிட்டு, அவர்கள் தப்ப முயன்றனர்.

அப்போது, போலீஸ் ஜீப்பில் மோதியதில், கார் டயர் வெடித்து கட்டுப்பாடு இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது.

தொடர்ந்து, காரில் இருந்த கும்பல் இறங்கி ஓட முயன்ற போது, போலீசார் பிடித்தனர். காரில் நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சா, 100 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.எ., என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

அவர்கள் திருச்சூரை சேர்ந்த முகமதுபஷீர், 28, செர்ப்புளச்சேரி முகமது ஜாபர், 25, செய்துஅலி, 27, என்பது தெரியவந்தது.

வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருள் கடத்தி வரும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், வழியில் பல வாகனங்களில் மோதி விட்டு, நிற்காமல் வந்ததும் தெரியவந்தது.

மூன்று பேரையும் கைது செய்து, கஞ்சா, போதை மாத்திரை, காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us