sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேலைக்கு ரஷ்யா செல்வோர் கவனம்; உக்ரைன் போரில் உயிரிழந்த கேரள வாலிபர் குடும்பம் கதறல்!

/

வேலைக்கு ரஷ்யா செல்வோர் கவனம்; உக்ரைன் போரில் உயிரிழந்த கேரள வாலிபர் குடும்பம் கதறல்!

வேலைக்கு ரஷ்யா செல்வோர் கவனம்; உக்ரைன் போரில் உயிரிழந்த கேரள வாலிபர் குடும்பம் கதறல்!

வேலைக்கு ரஷ்யா செல்வோர் கவனம்; உக்ரைன் போரில் உயிரிழந்த கேரள வாலிபர் குடும்பம் கதறல்!

6


UPDATED : ஆக 19, 2024 08:04 AM

ADDED : ஆக 19, 2024 07:56 AM

Google News

UPDATED : ஆக 19, 2024 08:04 AM ADDED : ஆக 19, 2024 07:56 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர்: வேலை தேடி ரஷ்யா செல்வோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல வேலை என்று நம்பி சென்ற கேரளா வாலிபர், உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

ராணுவ கேண்டீன்


திரிச்சூரின் நாயாரங்கடியைச் சேர்ந்த கன்கில் சந்திரன் மகன் சந்தீப், 36. இவர் கேரளாவைச் சேர்ந்த 7 பேருடன் கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஏஜென்சி மூலம் ஓட்டலில் வேலை செய்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார். ஆனால், அங்கு ரஷ்யாவின் ராணுவ கேண்டீனில் வேலை கிடைத்து பணியாற்றி வந்துள்ளார்.

தாக்குதல்


இந்த சூழலில், ரஷ்யாவின் குடியுரிமை பெற வேண்டும் என்று ஆசையினால், ரஷ்ய ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவர் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டார்.

அவர் இருந்த ராணுவ வாகனம் மீது, உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், சந்தீப் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. சந்தீப் உயிரிழந்ததை ரஷ்யாவின் மலையாளிகளின் சங்கம் உறுதி செய்துள்ளது.

மத்திய அரசு


இந்த நிலையில், சந்தீப்பின் உடலை பெற்றுத் தருமாறு மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் மாநில அமைச்சர் ஜார்ஜ் குரியனிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் உடலை பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோரிக்கை


சந்தீப் குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், 'மாஸ்கோவில் ரெஸ்டாரன்டில் வேலை என்று தான் முதலில் சந்தீப் கூறினார். பின்னர், ரஷ்யாவின் ராணுவ கேண்டீனில் பணி கிடைத்துள்ளதாகவும், அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் எங்களிடம் கூறினார். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றத் தொடங்கிய பிறகு எங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. ரஷ்யாவில் உள்ள அவரது நண்பர்களுடனும் சரிவர பேசிக்கொள்வதில்லை. அவரது உடலை மத்திய அரசு தலையீட்டு பெற்றுத் தர வேண்டும்' எனக் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரஷ்யா சார்பில் போரில் ஈடுபடுவதற்கு அந்நாட்டினர் அதிகம் முன் வருவதில்லை. இதனால் வேலை தேடி வரும் வெளிநாட்டினருக்கு ஆசை வார்த்தை கூறி, போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் விவரம் தெரியாமல் சென்று மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள் உயிரிழக்கின்றனர். எனவே ரஷ்யா வேலைவாய்ப்பு என்றால், கவனத்துடன் இருப்பது நல்லது.






      Dinamalar
      Follow us