sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது

/

பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது

பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது

பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது


ADDED : மார் 12, 2025 11:20 PM

Google News

ADDED : மார் 12, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடுகோடி: பெங்களூரு, தொட்டபனஹள்ளியில் வங்கதேசத்தை சேர்ந்தவர் சட்டவிரோதமாக வசிப்பதாக, காடுகோடி போலீசாருக்கு சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. அந்த நபரின் நடவடிக்கையை, போலீசார் கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் முகமது சித்திக், 55, என்பதும், 2006ம் ஆண்டில் மேற்குவங்க மாநிலம் வழியாக நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததும் தெரிந்தது. கோல்கட்டா, மால்டா பகுதிகளில் பல ஆண்டுகள் வசித்துள்ளார். பின், அங்கிருந்து பெங்களூரு வந்து இங்கு வசித்ததும் தெரிந்தது.

மால்டாவில் வசித்தபோது, போலி முகவரியை கொடுத்து ஆதார், வாக்காளர், பான் அட்டையை பெற்றதும் தெரிந்தது. மேலும் தன்னை போல வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு, ஆதார், பான் அட்டையை வாங்கிக் கொடுத்தும் தெரியவந்தது. விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us